கூடுதல் பேருந்து நிலையம் மீண்டும் செயல்பாட்டு கொண்டுவர எம்.எல்.ஏ மனு அளித்தார்!
1041 views
Subscribe தமிழ்நாடு videosவாணியம்பாடி பைபாஸ் சாலையில் உள்ள கூடுதல் பேருந்து நிலையம் மீண்டும் செயல்பாட்டு கொண்டுவர மற்றும் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையையும், நகராட்சி சாலையும் இணைத்து சாலை அமைக்கக்கோரி மத்திய அமைச்சரிடம் வாணியம்பாடி எம்.எல்.ஏ செந்தில்குமார் கோரிக்கை மனு அளித்தார்.வாணியம்பாடி ரயில் நிலையம் விரிவாக்கம் மற்றும் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கியதற்கும் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தார்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வாணியம்பாடி பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த மத்திய அமைச்சர் வி.கே சிங் அவர்களை வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கழக நிர்வாகிகளுடன் சென்று சால்வை அணிவித்து மனு ஒன்றை அளித்தார் அதில் வாணியம்பாடி பைபாஸ் சாலையில் உள்ள கூடுதல் பேருந்து நிலையம் 12 ஆண்டுகளாக செயல்படாமல் இருப்பதை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரவும், தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையையும், நகராட்சி சாலையும் இணைத்து சாலை அமைக்கக்கோரி கோரிக்கை மனு அளித்தார்.மேலும் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால், அதனை ஏற்படுத்தி தரக்கோரியும், ரயில்வே நடைமேடை பகுதியை விரிவாக்கம் செய்து தரக்கோரியும் பழுதடைந்துள்ள ரயில் நிலைய அதிகாரிகள் அறைகளை புதுப்பிக்க கோரியும், மத்திய அரசுக்கும் ரயில்வே நிர்வாகத்திற்கு கடந்த மாதம் கோரிக்கை மனு ஒன்றை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் நேரில் ரயில்வேதுறை உயர் அதிகாரிகளிடம் மனு அளித்து இருந்தார்.அதன் அடிப்படையில் ரெயில் நிலையம் மேம்படுத்த மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கியும், பணிகளைத் தொடங்க ஆணையிட்டதற்காகவும்,வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவ பிரிவு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்தும், வாணியம்பாடிக்கு வந்த மத்திய தேசிய நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, தரைவழி ஆகிய துறைகளின் அமைச்சர் விஜயகுமார் சிங்கிடம், வாணியம்பாடி சட்ட. மன்ற உறுப்பினர் செந்தில்குமார் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். அப்போது நிர்வாகிகள் பாரதிதாசன் கோவிந்தசாமி சங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்