கொல்லிமலையில் மலைவாழ் மக்களுடன் பராம்பரிய நடனமாடிய எம்.எல்.ஏ
1027 views
Subscribe தமிழ்நாடு videosநாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள எல்லகிராய்பட்டியில் ஹீமோகுளோபினோபதி பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தனர்.அதனை தொடர்ந்து 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உயர்ரக மருந்துகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது விழா மேடையின் அருகே கொல்லிமலை மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனமான சேர்வையாட்டம் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஆண்கள் உடல் முழுவதும் பல வண்ண புடவைகளை சுற்றி பாடல் பாடியும் இசைக்கருவிகளை இசைத்தவாறு நடனமாடினர். அப்போது, இந்த நடனத்தை யாரிடம் கற்று கொண்டீர்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேட்டதற்கு, அதற்கு மலைவாழ் மக்கள் சேந்தமங்கலம் எம்.எல்.ஏ பொன்னுசாமியிடம் கற்று கொண்டதாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து சேந்தமங்கலம் எம்.எல்.ஏ பொன்னுசாமியை பழங்குடியினருடன் இணைந்து நடனமாட அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் மதிவேந்தன் ஆகியோர் வலியுறுத்தினர். அதன்பின் எம்.எல்.ஏ பொன்னுசாமி பழங்குடியினருடன் இணைந்து இசைக்கருவிகளை இசைத்தவாறு நடனமாடினார். அவரை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் மதிவேந்தன் ஆகியோர் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.