ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நிகழ்ச்சி செய்திகள்!
1038 views
Subscribe தமிழ்நாடு videosதிண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், அழகுப்பட்டி ஊராட்சியில் 5 விவசாயிகளுக்கு தலா ரூ.52,360 மதிப்பிலான மொத்தம் ரூ.6,28,320 மதிப்பில் மொத்தம் 12 கறவை மாடுகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் வழங்கினார்.திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், அழகுப்பட்டி ஊராட்சியில், விவசாயிகளுக்கு இலவச கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் விசாகன் அவர்கள் தலைமையில் தெப்பக்குளத்துப்பட்டி கால்நடை மருந்தக வளாகத்தில் இன்று(05.05.2023) நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் கலந்துகொண்டு, விவசாயிகள் 5 நபர்களுக்கு தலா ரூ.52,360 மதிப்பிலான மொத்தம் ரூ.6,28,320 மதிப்பில் மொத்தம் 12 கறவை மாடுகள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய விவசாய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். இப்பகுதி என்னுடைய அறிவுறுத்தலுக்கிணங்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டு, தற்போது இப்பகுதி விவசாயிகள் 5 நபர்களுக்கு 12 கறவை மாடுகள் வழங்கப்படுகிறது. மேலும் இனி இதுபோன்ற இழப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கையுடன் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ஏழை, எளிய விவசாய குடும்பங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இதுபோன்ற உதவிகள் வழங்கப்படுகிறது. மாடுகள் இறப்புக்கான காரணம் குறித்து கால்நடை பல்கலைக்கழகம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, மாடுகள் உட்கொள்ளும் புல்லில் அதிக அளவு யூரியா இருந்ததால் இந்த பாதிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளும் மாடுகளுக்கு வழங்கக்கூடிய உணவுகளில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சிவகுருசாமி, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் திருவள்ளுவன், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் சந்தனமேரி கீதா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திருமதி சுப்புலட்சுமி சண்முகம், கால்நடை பராமரிப்பு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.