சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கலசம் வைக்கும் பணி தீவிரம்!
1060 views
Subscribe மயிலாடுதுறை videosமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டநாதர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தர்க்கு, உமையம்மை ஞானபால் வழங்கிய இத்தலத்தில் திருநிலை நாயகி அம்மன் உடனடியாக பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலித்து வருகிறார். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் மே 24 -ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி கோயிலில் உள்ள நான்கு கோபுரங்கள், பிரகாரங்கள், அனைத்து சுவாமி சன்னதிகள், விமானங்கள் புதுப்பிக்கப்பட்டும் கருங்கல் சன்னதி மற்றும் கருங்கல் பிரகாரம் அமைக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவு பெற்று வருகிறது. இக்கோயிலில் உள்ள ருணம் தீர்த்த விநாயகர் விமானத்தில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் திருகரத்தால் கோபுர கலசம் வைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை கிழக்கு ராஜகோபுரத்தில் கோபுர கலசம் வைக்கும் பணி தொடங்கியது. முன்னதாக கோபுர கலசங்களுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு செய்யப்பட்டு கிழக்கு ராஜகோபுர திருப்பணி உபயதாரர் மார்கோனி மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மற்றும் பக்தர்கள் நவ தானியங்களை கோபுர கலசத்தில் இட்டு கலசத்திற்கு சிறப்பு வழிபாடு செய்தனர். அதன் பின்னர் கோபுர கலசங்கள் கிழக்கு ராஜகோபுரத்தில் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது. முன்னதாக சீர்காழி தொழிலதிபர் மார்கோனி குடும்பத்தினர் கோயில் கோ தானம் வழங்கி கோ பூஜை செய்தனர் இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் மேற்கொண்டனர்.