சீர்காழியில் நிதி ஒதுக்கி இரண்டு ஆண்டுகள் கடத்தும் அலட்சியம் காட்டும் அதிகாரிகள்!
1026 views
Subscribe மயிலாடுதுறை videosமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சின்னந்தி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் நூறு ஆண்டுகளுக்கு மேலான பழமையான கோயிலாகும். தற்போது விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இக்கோயில் சாலையோரம் உள்ளதால் கோயிலை அகற்றியே சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோயிலை அகற்றி வேறு இடத்தில் அமைக்க நெடுஞ்சாலை துறை சார்பில் 37 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்ட நிதியானது திருவெண்காடு சுவேதரனேஸ்வரர் கோயில் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. கோவில் இடிக்கப்பட்டு பாராலயம் மட்டுமே செய்து கோவில் கட்டும் பணிகளை செய்யாமல் கிடப்பில் போடப்பட்டதாக கூறும் குலதெய்வ வழிபாட்டாளர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஒதுக்கப்பட்ட தொகையை வங்கி கணக்கிலிருந்து மாற்றி வைப்பு தொகையாக வைத்துள்ளதாக குற்றம்சாட்டினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்தால் தமிழக அரசு நிதி ஒதுக்கிய பின்னரே பணிகளை தொடங்கப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இடிக்கப்பட்ட கோவிலுக்கு ஏற்கவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட நிலையில் அத்தொகையை அதிகாரிகள் என்ன செய்தார்கள் என்ற விவரத்தை கேட்டு சின்னந்தி மாரியம்மன் கோவிலை குல தெய்வமாக கொண்ட 30க்கு மேற்பட்டோர் திருவெண்காடு கோவிலில் உள்ள அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், மேலும் கோவிலுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட தொகை வைத்து எங்களுக்கு கோவிலை விரைவில் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் அப்பகுதியில் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் குல தெய்வமாக வழிபடக்கூடிய சின்னந்தி மாரியம்மன் கோயில் இடிக்கப்பட்டு கிடப்பது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தனர்.