நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம் - ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் காட்டம்!
1252 views
Subscribe மயிலாடுதுறை videosதமிழகம் மற்றும் புதுச்சேரி ஸ்டேட் வங்கி ஊழியர்களின் மாநில செயற்குழு கூட்டம் இன்று நாகையில் நடைபெற்றது. தமிழக மற்றும் புதுச்சேரி ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திருச்சி தஞ்சை திருவாரூர் காரைக்கால் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து எஸ் பி ஐ வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் இதில் திரளானோர் கலந்து கொண்டனர். செயற்குழு கூட்டத்தில் பேசிய ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் கிருபாகரன், சென்ற நிதியாண்டில் ஆண்டுக்கு 1, லட்சம் கோடி வருமானம் ஈட்டிய பொதுத்துறை நிறுவன வங்கிகளை, தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கண்டனம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து செய்தியாளரிடம் கூறிய கிருபாகரன், பொதுத்துறை நிறுவன வங்கிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதால், அதன் ஊழியர்கள் மட்டுமல்ல! வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் என்றும் ஐ சி ஐ சி, ஐ, எஸ் பேங்க் தனியார் வங்கி தலைவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டு சிறையில் உள்ள நிலையில், பொதுத்துறை நிறுவன வங்கிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதால், ஒட்டுமொத்தமாக இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என்றும் அவர் கூறினார். எனவே பொதுத்துறை நிறுவனமான வங்கிகளை தனியாருக்கு கொண்டு செல்வதால் முறைகேட்டிற்கு வழிவகை செய்ய மத்திய அரசு முனைப்பு காட்டுவதாக காட்டம் தெரிவித்த வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் கிருபாகரன், பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிடாவிட்டால், மத்திய அரசுக்கு எதிராக, வங்கி ஊழியர்களும், வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.