நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பாக நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகை!
1014 views
Subscribe மயிலாடுதுறை videosசௌதி அரேபியாவில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடபடுவதை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பினர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தியாக திருநாளான பக்ரீத் பண்டிகையின் போது ஆடு, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் பலி கொடுக்கப்பட்டு, அதன் இறைச்சியை மூன்றில் ஒரு பங்காகப் பிரித்து ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்வர். நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பினர் சார்பாக நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். இதேபோல நாகை மாவட்டத்தில் திட்டச்சேரி, மஞ்சக்கொல்லை, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜாக் அமைப்பினர் பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.