கனரா வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்கில் 25 வயது இளைஞர் கைது!
1022 views
Subscribe மயிலாடுதுறை videosநாகப்பட்டினம் வெளிப்பாளையம் பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் இயங்கி வரும் கனரா வங்கியில் கடந்த 10ம் தேதி ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதில் ஏடிஎம்மில் இருந்த ஏழு லட்ச ரூபாய் தப்பியது. இது குறித்து வழக்கு பதிவு செய்த வெளிப்பாளையம் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பெயரில் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். மேலும் குற்றவாளி பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை வைத்து குற்றவாளியை அடையாளம் கண்டுபிடித்தனர். ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் நாகப்பட்டினம் கொத்தான்குளம் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் விஸ்வநாதன் என்பது தெரியவந்தது . இதனையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர் .அப்போது வெளிப்பாளையம் காவல் நிலையம் அருகில் உள்ள டீக்கடையில் நின்றிருந்த நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ஏடிஎம்மை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டதை விஸ்வநாதன் ஒத்துக் கொண்டார். அதிக அளவிலான கடன் இருந்ததால் ஏடிஎம்மை கொள்ளை அடிக்க திட்டமிட்டதாகவும், அதிகாலை 2 மணிக்கு திட்டமிட்டு சென்றதாகவும், ஏடிஎம் ஐ உடைக்க முடியாததால் இரண்டு மணி நேரம் ஏடிஎம்மில் உட்கார்ந்து அழுததாகவும், பொழுது விடிந்ததால் இங்கிருந்து கிளம்பி விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் ஏடிஎம் கொள்ளை முயற்சிக்கு பின் இரண்டு முறை தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விஸ்வநாதனை நாகப்பட்டினம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.