கிராம சபைக் கூட்டத்தில் மஞ்சப்பை விழிப்புணர்வு!
Subscribe தமிழ்நாடு videos
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள தடியமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்றத்தலைவர் நாகஜோதி தலைமையில் கிராமச்சபைக் கூட்டத்தில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிரவிக்குமார் மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டனார் ஊராட்சியில் மேற்கொண்ட பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட ஆட்சியர் அங்கு கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் பின்னர் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள் அற்ற மாவட்டமாக சிவகங்கை மாவட்டத்தினை உருவாக்குவதற்கு அடிப்படையாகவும், முன்னுதாரணமாகவும் திகழும் வகையில், தடியமங்கலம் ஊராட்சி திகழ வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்,