மரக்கழுவிகளை பயன்படுத்தி கைவினைப் பொருட்கள் செய்து அசத்தல்!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் ஆரணி சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த ஒரு மாதகாலமாக தச்சு வேலை செய்பவர்கள் வீணாக இருக்கும் மரக்கழிவுகளை பயன்படுத்தி கைவினைப் பொருட்கள் செய்து வருகின்றனர்.ஆரணி அருகே துந்துரிங்கப்பட்டு கிராமத்தில் காதி மற்றும் கிராம தொழில் மையத்தைச் சேர்ந்த இயக்குனர் சுரேஷ் தலைமையில் மரக்கழிவுகளால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களை பொதுமக்கள் பார்க்கும் படி காட்சிப்படுத்தப்பட்டது இதில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கவரம் வகையில் கடல் மீன், வகைகள் ஆமை, கொக்கு, திருவாரூர் தேர், மரத்தில் பறவைகள், அமர்ந்திருக்கும் காட்சிகள் லைட் ஹவுஸ், மகாத்மா காந்தி, உருவப்படம் போன்ற கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டது இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.இதுபோன்ற கிராமங்களில் மரக்கழிவுகளை வைத்து கைவினைப் பொருட்கள் செய்து அசத்திய நபர்களுக்கு காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையம் சார்பில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.மேலும் இதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அரசு சார்பில் மானியத்துடன் வங்கி கடன் வழங்கப்படும் என்றும் காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் இயக்குனர் தெரிவித்தார்tamilnaduTimesXP TamilUpdated: 5 Jun 2023, 2:10 pm