புத்தக திருவிழாவில் 10 ஆயிரம் புத்தகங்களை வாங்கி உசிலம்பட்டி எம்எல்ஏ துவக்கி வைத்தார்!
1033 views
Subscribe மதுரை videosமதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலைய வளாகத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், அரசு ஊழியர் சங்கம் இணைந்து மாபெரும் புத்தக திருவிழாவை நடத்தி வருகின்றனர்.,தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் பல்வேறு வகையான 300க்கும் அதிகமான படைப்புகளை காட்சி படுத்தியுள்ள சூழலில் உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ அய்யப்பன், உசிலம்பட்டி நகராட்சி சேர்மன் சகுந்தலா இணைந்து துவக்கி வைத்தனர்.செல்போன் வந்த பின் பொதுமக்களிடையே வாசிப்பு தன்மை குறைந்துவிட்டது எனவும், வாசிப்பு திறனை அதிகப்படுத்த இது போன்ற புத்தக திருவிழாவை அனைத்து பகுதிகளிலும் நடத்த எப்போது வேண்டுமானாலும் உறுதுணையாக இருப்பேன் என பேசினார்.மேலும் இந்த புத்தக திருவிழாவை ஊக்கப்படுத்தும் விதமாக சுமார் 10 ஆயிரம் மதிப்பிலான நூற்றுக்கணக்கான புத்தகங்களை வாங்கி இந்த புத்தக திருவிழாவை எம்எல்ஏ அய்யப்பன் துவக்கி வைத்தார்.