மதுரை அழகர் கோவிலில் உண்டியல்கள் என்னும் பணி துவக்கம்
1037 views
Subscribe மதுரை videosசித்திரைத் திருவிழாவிற்காக மதுரை நோக்கி சென்ற தற்காலிக 39 தள்ளு உண்டியல்கள் என்னும் பணி துவக்கம் கோவில் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு -சென்ற ஆண்டு ஒரு கோடி கிடைக்கப்பெற்ற நிலையில் இந்த ஆண்டு அதைத் தாண்டும் என எதிர்பார்ப்புஉலகப் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்று வந்த நிலையில் மூன்றாம் தேதி மாலை அழகர் மலையில் இருந்து சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகர் வேடமிட்டு மதுரையை நோக்கி புறப்பட்டார் பக்தர்கள் கோவிந்தா என கோஷம் முழங்க மதுரையில் பல்வேறு மண்டகப் பணிகளில் எழுந்தருளிய பிறகு வரலாற்று சிறப்புமிக்க வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு ராமராயர் மண்டபத்தில் நடைபெற்ற தசாவதாரம் , தேனூர் மண்டபத்தில் நடைபெற்ற மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம்,தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் பகுதியில் நடைபெற்ற பூப்பல்லாக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்குப் பிறகு கள்ளழகர் இருப்பிடமான அழகர் மலைக்கு வந்த நிலையில் கள்ளழகர் ரோடு சித்திரைத் திருவிழா முழுவதும் பயணித்து பக்தர்களுடைய காணிக்கை வசூல் செய்து விட்டு கோவில் வந்தடைந்த 39 தற்காலிக தள்ளு உண்டியல்கள் என்னும் பணி தற்போது துவங்கி இருக்கிறதுதிருக்கோவில் இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு வரக்கூடிய நிலையில் கோவில் பணியாளர்கள் , வங்கி ஊழியர்கள், பக்தர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் வசூலை என்னும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்திருக்கோவில் துணை ஆணையாளர் நிர்வாக அதிகாரி ராமசாமி,இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் உதவி ஆணையாளர் கருணாகரன்,இந்து சமய அறநிலையத்துறை வடக்கு ஆய்வர் கர்ணன் ஆகியோர் மேற்பார்வையில் உண்டியல் என்னும் பணி நடைபெற்று வருகிறதுசென்ற ஆண்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் வசூல் ரூபாய் ஒரு கோடியை தாண்டிய நிலையில் இந்த ஆண்டு அதனை விட கூடுதலாகவே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.