சித்திரை திருவிழா நாயகன் கள்ளழகர் தங்ககுதிரை தயார் செய்யும் பணிகள் தீவிரம்!
1071 views
Subscribe மதுரை videosசித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் தல்லாகுளம் பகுதியில் இருக்கக்கூடிய பெருமாள் கோவிலில் இருந்து புறப்பாடாகி தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.இந்தநிலையில் அழகர்கோயில் உட்பிரகாரத்தில் அழகரின் வாகனங்கள் பராமரிக்கும் பணி தற்போது துவங்கியுள்ளது.வருகின்ற 3 ஆம் தேதி தங்க பல்லக்கில் ஆலயத்தை விட்டு மதுரைக்கு புறப்படும் கள்ளழகர் மே 5 ஆம் தேதி தங்க குதிரையில் வைகை ஆற்றில் எழுந்தருளுவார்.பின்பு வண்டியூர் பகுதியில் உள்ள தேனூர் மண்டபத்தில் சேஷ வாகனம், கெருட வாகனத்தில் காட்சி தருவார். இந்த சித்திரை திருவிழாவுக்காக ஆலயத்தில் தங்ககுதிரை வாகனம், கெருட வாகனம்,சேஷ வாகனம் , தங்கப்பல்லக்கு உள்ளிட்ட வாகனங்கள் பரமாரிப்பு பணிகளில் தற்போது கோயில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.