புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தரவேண்டி மாணவ மாணவிகள் ஆட்சியரிடம் மனு
Subscribe மதுரை videos
மதுரை மாவட்டம் சங்கரலிங்கபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் பள்ளியை புறக்கணித்து தங்களின் பெற்றோர்களுடன் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்,அந்த மனுவில் கூறியிருப்பதாவது,மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகாவில் சாப்டூர் பஞ்சாயத்துக்கூட்பட்ட எஸ் சங்கரலிங்காபுரத்தில் சங்கரலிங்கபுரம் அரசு பள்ளி ஒன்று 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியின் பெயர் சங்கரலிங்காபுரம் அரசு பள்ளி என்று செயல்பட்டு வந்த நிலையில் மெய்யனூத்துப்பட்டி அரசு பள்ளி என மாற்றம் செய்ய மெய்யனூத்துப்பட்டி கிராம மக்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் முயற்சித்து வருவதாகவும் பள்ளியின் பெயரை மாற்றக்கூடாது எனவும் முயற்சி செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அப்பகுதி மக்கள் சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.மேலும் எங்கள் சங்கரலிங்காபுரம் அரசு பள்ளியின் கட்டிடம் இடிந்த நிலையில் உள்ளது எனவே பள்ளியை இடித்து புதிய பள்ளி கட்டிடம் கட்டித் தருமாறும் கேட்டுக்கொள்கிறோம் எனவும் மாணவ மாணவியர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.