"ஸ்டாலின் பதவி விலக வேண்டும்" ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் உலக பசி தினத்தை முன்னிட்டு பார்வையற்றோர் மற்றும் வறியவர்களுரக்கு அரிசி மற்றும் உணவு பொருட்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பார்வையற்றோர் மற்றும் வறியவர்களுக்கு அரிசி உணவு பொருட்களை முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.எஸ்.சரவணன் மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் .நெல்லை பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்பி உதயகுமார் னபேட்டி அளித்து பேசுகையில்,தமிழகத்தின் செங்கோல் நாடாளுமன்றத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் நிறுவப்பட்டுள்ளது தமிழகத்தின் ஆளுமையை உலகளாவில் நிரூபிக்கிற காலமாக மலர்ந்திருக்கிறது.தமிழர்களின் செங்கோல் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று இருப்பது தமிழர்களுக்கு பெருமை அளிக்கிறது.உலகத் தலைவர்கள் வரிசையில் உள்ள பிரதமர் மோடி கையில் தமிழகத்தின் ஆதீனங்கள் செங்கோலை வழங்கி இருப்பது தமிழர்களின் கலை, பண்பாட்டு பாரம்பரியத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலும், தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் அமைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, திருச்சி, தர்மபுரி மருத்துவக்கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது.இன்றைக்கு மூன்று மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டிருப்பது வேதனையின் உச்சமாக, நிர்வாகத் திறனற்ற கையாலாகாத ஆட்சியாக திமுக அரசு உள்ளதற்கு சான்றாக உள்ளது.75 ஆண்டுகள் சுதந்திரம் பெற்ற இந்தியாவில் வருமான வரித்துறை எத்தனையோ அரசியல்வாதிகள் நடிகர்கள, தொழிலதிபர்கள் முக்கியஸ்தர்கள் பொதுவாழ்வில் இருப்பவர்கள் வீடுகளுக்கு சோதனைக்கு சென்றுள்ளனர்.ஆனால் நாட்டிலேயே முதல் முறையாக சோதனைக்குச் சென்ற அதிகாரிகளை தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது திமுகவின் காட்டாட்சியில் நடந்துள்ளது. திமுக ஆட்சி காட்டாட்சி என்பதற்கு இந்த சம்பவமே ஒரு சான்றாக உள்ளது.வருமான வரித்துறை அதிகாரிகள் எங்களிடம் தகவல் சொல்லிவிட்டு வரவில்லை என கரூர் எஸ் பி கூறுகிறார். கரூர் எஸ் பி எப்படி அதிகாரியானார் என்று தெரியவில்லை. அவர் அதிகாரி போல் இல்லாமல் திமுக மாவட்ட செயலாளர் போல பேசுகிறார்.வருமானவரித்துறை, தேசிய பாதுகாப்பு அதிகாரிகளோ யாரும் சொல்லிவிட்டு வரவேண்டிய அவசியம் இல்லை.இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய காட்டு தர்பார் திமுக ஆட்சியில் மட்டுமே நடக்கிறது. வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கிய சம்பவம் வரலாற்றில் கரும்புள்ளியாக உள்ளது.தமிழகம் முழுவதும் நான்காயிரம் சட்டவிரோத மதுபான கடைகள் இயங்கி வருகிறது.இதை கரூர் கம்பெனிக்காரர்கள் தான் அனுமதித்துள்ளனர். இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சட்ட விரோத மதுபான கடைகள் பார்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.அனைத்து மதுபான கடைகளிலும் மதுபான பாட்டில்களுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூல் செய்து தர வேண்டும் என கரூர் கம்பெனி தெரிவித்துள்ளதாக விற்பனையாளர்களே தெரிவித்துள்ளனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறும் அதிமுக பொன்விழா மாநாடு இந்திய அரசியல் வரலாற்றில் முத்திரை பதிக்கும் மாநாடாக இருக்கும்.நாட்டில் விவாதிக்க வேண்டிய எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் நிலையில் தங்களை முன்னிலைப்படுத்தி விளம்பரப்படுத்தும் பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் பேசுகின்றனர்.அதிமுகவை பொறுத்தவரை புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரவேற்று உள்ளோம்.ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கும்.1947 ஆம் ஆண்டு திருவாடுதுறை ஆதீனம் நேருக்கு வழங்கிய செங்கோலை காங்கிரஸ் குப்பையிலே வீசிவிட்டது.ஆனால் பிரதமர் நரேந்திர மோடி செங்கோலுக்கு உரிய மரியாதை கொடுத்து அதனை நாடாளுமன்றத்தில் நிறுவியிருக்கிறார்.தமிழர்களின் செங்கோல் நாடாளுமன்றத்தில் இருப்பது தமிழர்களின் பண்பாடு பாரம்பரியம் தமிழ் இனத்திற்கு, தமிழர் பெருமைக்கு கிடைத்த அடையாளமாகவே உள்ளது.செங்கோல் தற்போது உலக அளவில் பெருமை பெற்றுள்ளது. பாராளுமன்றத்தில் நிறுவப்பட்டுள்ள தமிழர்களின் செங்கோலுக்கு கிடைக்கும் ஒவ்வொரு புகழும் தமிழர்களுக்கும் தமிழினத்திற்கும் கிடைக்கும் புகழாகும்.செங்கோல் நிறுவுவதைப் பற்றி விமர்சிப்பது உப்புக்குச் சப்பான விவாதம். ஆரோக்கியமான விவாதத்திற்கு வழி வகுக்காமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நாடாளுமன்றத்தை பற்றியும் செங்கோலை பற்றியும் விமர்சிக்கிறார்கள் என தெரிவித்தார்.