மதுரை:கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு;மகிழ்ச்சியுடன் வந்த மாணவர்கள்!
Subscribe மதுரை videos
கோடை விடுமுறையை முன்னிட்டு தமிழக பள்ளிக்கல்வி உத்தரவின் பேரில் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் என அறிவித்திருந்தது நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவின் பெயரில் ஜூன் 12-ம் தேதியான இன்று முதல் உயர்நிலை., மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிகள் திறக்கப்பட்டது தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஜூன் 14ஆம் தேதி நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.இந்த நிலையில் கோடை விடுமுறையை தங்களது குடும்பத்தினருடன் கழித்துவிட்டு மீண்டும் பள்ளியில் படிப்பதற்கு இன்று முதல் நாள் என்பதால் பலரும் தங்களது பெற்றோர்களுடன் பள்ளிக்கு வருகை தந்தனர். குறிப்பாக திருப்பரங்குன்றம், திருமங்கலம் மற்றும் அதனை சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து அந்தந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் விடுமுறை நாட்களில் தங்களது குடும்பத்தினரும் கழித்துவிட்டு மீண்டும் தங்களது நண்பர்களையும், ஆசிரியர்களையும் பார்ப்பதற்கு பள்ளிக்கூடத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களும் தங்களது பெற்றோர்களிடம் விடுதியில் தங்கிய பயிலும் மாணவர்களும் தங்களது உடைமைகளை எடுத்துக்கொண்டு பெற்றோர்களுடன் பள்ளிக்கு வந்துள்ளனர். மீண்டும் பள்ளிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக பள்ளிக்கு வந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.