முதல்வருக்கு சவால் விடுத்த ஆர்.பி.உதயகுமார்பற்றாக்குறையாக உள்ள அரசு பேருந்து சேவைகளை பள்ளி திறப்பதற்கு முன்பு விடியா திமுக அரசு சீர்படுத்திட முன் வருமாசட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்விமதுரைபோக்குவரத்துதுறையில் இன்றைக்கு நாம் எதார்த்தத்தை பேச வேண்டும் என்று சொன்னால், போக்குவரத்து துறையில் இன்றைக்கு 5,000 கோடி பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது இந்த போக்குவரத்து சேவைகள் பற்றாகுறை இருந்தாலும், போக்குவரத்து சேவைகளில் எந்த வித குறைபாடு இல்லாமல், எடப்பாடியாரின் ஆட்சியில் மிகச் சிறப்பாக இருந்ததாக மக்கள் பேசுகிறார்கள் ஒன்னரை லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து நிலையில் தற்போது 20,000 காலி பணியிடங்கள் இந்த போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ளது அது மட்டுமின்றி உதிரி பாகங்கள் பற்றாக்குறை காரணமாக சுமார் இன்றைக்கு 2000 பேருந்துகள் செயல்படாத ஒரு முடங்கிய நிலையிலேயே இதனால் மக்களுக்கு சேவைகள் குறைபாடுகள் ஏற்பட்டிருக்கிறது. இந்த 2,000 பேருந்துகள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்ன காரணம் என்றால் 20,000 பணியாளர்கள் பற்றாக்குறை, உதிரிபாகங்கள் பற்றாக்குறையாகும் இதற்கு பணிமனைகள் நிர்வாக சீர்கேடு ஆகும்மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்கப்படாததால், பணியிடங்களுக்கு செல்லும் பெண்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல வேண்டியதால் தனியார் அரசு பேருந்து கட்டணம் செலுத்தி தான் இன்றைக்கும் செல்கிறார்கள் இதுதான் இன்றைய எதார்த்தமான நிலைமையாக இருக்கிறது. அமைச்சர்கள் புதிய வழித்தடத்திற்கான பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைக்கிறார்கள். புதிய பேருந்து கொள்முதல் செய்தால் தானே புதிய வழித்தடத்தில் பேருந்து விட முடியும். ஏற்கெனவே பழைய வழிதடத்தை ரத்து செய்துவிட்டு, அதை புதிய வழித்தடமாக அமைச்சர்களை திருப்திப்படுத்துவதற்காக ஒரு நகைச்சுவை காட்சி அரங்கேற்றமும் தினந்தோறும் நடந்து கொண்டே இருக்கிறது. பள்ளிகள் திறப்பதற்கு முன்பாகவே இவ்வளவு சிரமங்கள் இருக்கிறது என்று சொன்னால், பள்ளிகள், கல்லூரிகள் திறந்து விட்டால் மாணவர்கள் செல்வதற்கு மிகப்பெரிய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பள்ளி திறப்பதற்கு முன்பாகவே உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை என்று சொன்னால் மிகப்பெரிய அளவிலே மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை இந்த அரசு கவனத்தில் கொள்ளுமா? நாள்தோறும் சுமார் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 1.70 கோடி மக்கள் இன்றைக்கு பயணம் செய்கிறார்கள் இந்த புள்ளி விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. 2022,2023 ஆண்டு மானிய கோரிக்கையில்12,000 கோடி வருமானம் ஈட்டிய நிலையில் எரிபொருள், உதிரி பாகங்கள்,ஊழியர்களுக்கு சம்பளம், வட்டி என 17,000 கோடி செலவு எனவும் 5000 கோடி பற்றாக்குறை உள்ளது என்று கூறப்பட்டுள்ளதுஇதிலே இந்த பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களை 40% உயர்ந்திருக்கிறது ஏனென்றால் காகிதம் உயர்ந்திருக்கிறது. அதுவே மாணவர்களுக்கு பெற்றோர்களுக்கு மிகப்பெரிய சுமையாக இருக்கப்போகிறது. தலைமை ஆசிரியர் பற்றாக்குறை புள்ளிவிவரத்தோடு ஆதாரத்தோடு எடப்பாடியார் அறிக்கை விட்டதை முக்கிய விவாதமாக வைக்கின்றோம். ஏனென்றால் இன்றைக்கு பள்ளியின் தரம் கேள்விக்குறியாக இருக்கிறது 50,000 பேர்கள் தமிழ் பாடத்தை எழுதவில்லை என்கிற ஒரு வரலாறு தமிழ்நாட்டில் இதுவரை நாம் பார்த்ததில்லை தான் இந்த அரசு கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும் பற்றாக்குறையாக உள்ள அரசு பேருந்து சேவைகளை பள்ளி திறப்பதற்கு முன்பு விடியா திமுக அரசு சீர்படுத்திட முன் வருமா? என கூறியுள்ளார்.