தமிழில் அன்னையர் தின வாழ்த்து தெரிவித்த விமானி!துணை விமானி விமான பயணிகளுக்கு கவிதை மூலம் அன்னையர் தின வாழ்த்துக்கள் கூறிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல்.மதுரை விமான நிலையத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் வந்து செல்கின்றன இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் 6E7005 மதுரை வந்த பயணிகளுக்கு அந்த விமானத்தின் துணை விமானியான பிரியாவிக்னேஷ் என்பவர் மதுரையில் பயணிகளை அழைத்து செல்வதற்கு முன்பு அன்னையர் தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.நேற்று நாடு முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து., பிரியாவிக்னேஷ் தான் இயக்கிய விமானத்தில் பயணம் செய்த நூற்றுக்கும் மேற்பட்ட பணிகளிடம் அன்னையர் தின வாழ்த்துக்களை கவிதை வாயிலாக தமிழில் கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அது வைரல் ஆகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.