மதுரை மாநகராட்சி சார்பில் 2752 தூய்மை பணியாளர்களை கொண்டு கலைஞர் உருவமாக்கும் உலக சாதனை நிகழ்ச்சி!
1033 views
Subscribe மதுரை videosமதுரை மாநகராட்சி சார்பில் ரேஸ்கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் தூய்மை பணியாளர்களைக் கொண்டு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் உருவத்தை பதிவாக்கும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் 2752 தூய்மை பணியாளர்கள் 100 மீட்டர் நீளமும் 70 மீட்டர் அகலத்தில் அமர்ந்து கலைஞரின் திரு உருவத்தை பதிவு செய்தனர். இந்த பதிவு காலை 7. 23 மணிக்கு துவங்கி காலை 8 43 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியை உலக சாதனை (Triumph) புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.அதற்கான சான்றிதழை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் சங்கீதா, வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி, மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார் ஆகியவரிடம் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் மண்டல தலைவர்கள் கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஒரு மணி நேரம் 20 நிமிடத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் திருவுருவம் தூய்மை பணியாளர்களால் அமர்ந்து உருவாக்கிய நிகழ்ச்சி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாகியது.