நொண்டிச்சாமி கோவில் கும்பாபிஷேகம்-பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்!
1064 views
Subscribe மதுரை videosமதுரை மாவட்டம் மேலூர் அருகே நொண்டிக்கோவில்பட்டியில் உள்ள 18பட்டி கிராமத்திற்கு பாத்தியப்பட்ட நொண்டிச்சாமி கோவில் கும்பாபிஷேகம் வருகின்ற 04ம் தேதி நடைபெற உள்ளது.இதனையொட்டி காப்புகட்டி விரதம் மேற்கொண்டு வரும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள், மேலூர் பேருந்து நிலையம் எதிரேயுள்ள காஞ்சிவனம் சுவாமி கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து, நகரின் முக்கிய வழியாக நொண்டிசாமி கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனைத்தொடர்ந்து, நொண்டிசாமிக்கு பாலாபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது.