சந்தை மேற்கூரையை பிரித்து அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வருவது பரபரப்பு!
1051 views
Subscribe மதுரை videosமதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள சந்தை பகுதியில் மணிபிரகாஷ், சேகர் என்பவருக்கு சொந்தமான இரு பலசரக்கு கடைகள் அருகருகே அமைந்துள்ளது.வழக்கம் போல் நேற்று கடையை பூட்டிவிட்டு சென்றவர்கள் இன்று காலை கடையை திறந்த போது கடையினர மேற்கூரையை பிரித்து கிடந்ததையும், கடைகளின் கல்லாக்கள் திறந்து கிடந்த்தையும் அதில் இருந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லரை என சுமார் 3700 ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்த்யதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்., இது குறித்து உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசாருக்கு தகவல் அளித்த நிலையில் விரைந்து வந்த போலிசார் மற்றும் குற்றப்பிரிவு போலிசார் கடையின் மேற்கூரையை பிரித்து கொள்ளையடித்த மர்ம நபர் குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,மேலும் இதே கடைகளில் கடந்த 2019ஆம் ஆண்டு புகுந்த கொள்ளையர்கள் கடையில் இருந்த சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான பணம், நகைகளை கொள்ளையடித்து சென்றதும், அந்த வழக்கு நிலுவையில் குறிப்பிடத்தக்கது.மேலும் ஒரே கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவது உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.