மதுரையில் குழந்தைகள் முழுங்கிய ஊக்குகளை அறுவை சிகிச்சையின்றி அகற்றி மருத்துவர்கள் சாதனை
1031 views
Subscribe மதுரை videosதென்மாவட்டத்தில் முக்கிய அரசு மருத்துவமனையாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில் புற்றுநோய், மகப்பேறு, குழந்தைகள் அறுவை சிகிச்சை, டயாலிசிஸ் பிரிவு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட துறைகள் செயல்பட்டு வருகின்றன. தென்மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகள் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.இந்நிலையில் குழந்தைகள் நலத்துறை மற்றும் அறுவை சிகிச்சை பிரிவில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் 2 வயதுக்குட்பட்ட மூன்று பிஞ்சு குழந்தைகள் விழுங்கிய ஊக்கு மற்றும் சாவி அறுவைசிகிச்சையின்றி அகற்றம் செய்து அரசு இராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.குறிப்பாக மானாமதுரையை சேர்ந்த அகல்யா ரவிச்சந்திரன் தம்பதியினரின் 2அரை வயது ஆண் குழந்தையும், அதே போல தூத்துக்குடியை சேர்ந்த சாரா, பெனியல் ஜெபராஜ் தம்பதியின் ஒன்றரை வயது ஆண்குழந்தையும் ஊக்கை விழுங்கிய நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எந்த வித அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளாமல் எண்டாஸ்கோப்பி மூலம் ஊக்கை அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை படைத்தனர்.அதேபோல மிகவும் அபூர்வமாக கரூரை சேர்ந்த அனிஸ்டா கனகராஜின் 2 மாத ஆண்குழந்தை சாவியை விழுங்கிய நிலையில் அதனையும் அரசு மருத்துவர்கள் அகற்றி உயிரை காப்பாற்றி உள்ளனர்.மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் ஒரு வருடத்தில் 30க்கும் மேற்பட்ட 2மாதம் முதல் 2அரை வயது வரையுள்ள குழந்தைகள் சாவி, ஊக்கு, கிளிப், தோடு உள்ளிட்டவற்றை கவனக்குறைவாக விழுங்கும் நிலையில் எந்தவித றுவை சிகிச்சையின்றி அவற்றை மருத்துவர்கள் அகற்றி சாதனை செய்து வருகின்றனர்.