மருத்துவக் கழிவுகளை குப்பைத் தொட்டியில் கலந்த மருத்துவமனைக்கு அபராதம்
1069 views
Subscribe மதுரை videosமதுரை மாநகர். பகுதிகளில் மருத்துவ கழிவுகளை குப்பைத் தொட்டியில் கொட்டிச்செல்லும் நிலை நீடித்துவருவதால் மாநகராட்சி அதிரடி நடவடிக்கை.மதுரையில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் கொட்டப்பட்டு வருகிறது.இதனால் சாலைகளில் மருத்துவ கழிவுகள் சிதறி அதனால் அந்த பகுதியில் செல்லக்கூடிய பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு குப்பைகளை அகற்றக் கூடிய தூய்மை பணியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர் இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள்வந்தன. இதைத் தொடர்ந்து, நகரின் பல்வேறு பகுதிகளில் அதிரடியாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத் குமார் மாநகரில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் கடந்த வாரம் அரசரடி பகுதியில் உரிய முறையில் மருத்துவ கழுவுகளை அகற்றாத தேவகி ஸ்கேன் மைய மருத்துவமனை நிர்வாகம் மீதுநடவடிக்கை எடுத்து மருத்துவமனைக்கு 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று காலை மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள அருண் மருத்துவமனையில் அருகேயுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை தொட்டியில் மருத்துவகழிவுகளான ஊசி, பேன்டேஜ், மருந்து பாட்டில்கள், குளுக்கோஸ் பாட்டில்கள், பயன்படுத்தபட்ட பஞ்சுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து தூய்மை பணியாளர்கள் சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அளித்த தகவலையடுத்து அது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் முனிச்சாலை பகுதியில் உள்ள அருண் மருத்துவமனையில் இருந்து மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மருத்துவகழிவுகள் அகற்றப்பட்ட பின்னர் மருத்துவக் கழிவுகளை உரிய முறையில் அழிக்காமல், சுற்றுச்சூழலை மாசுபடுத்தி பொதுமக்களை பாதிக்கும் வகையில் குப்பைத் தொட்டிகளில் கொட்டியதாக மாநகராட்சி சார்பில் நோட்டிஸ் அளிக்கப்பட்டு 1லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.மருத்துவமனைகள் மருத்துவக் கழிவுகளை குப்பை தொட்டியில் கலந்தாலோ உரிய முறையில் அகற்றாமல் அலட்சியமாக செயல்பட்டாலோ அந்த மருத்துவமனை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.