ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 50 லட்சம் வரை விற்பனையான ஆடுகள்
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 50 லட்சம் வரை விற்பனையான ஆடுகள்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ரூபாய் 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனைமதுரை மாவட்டம் வாடிப்பட்டி வாடிப்பட்டியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் இதில் ஆடுகள் கோழிகள் மற்றும் மாடுகள் போன்றவை விற்பனைக்காக கொண்டு வருவார்கள் இதன் தொடர்ச்சியாக இந்த வாரவார ஆட்டுச் சந்தையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர் மேலும் இந்த ஆட்டுச் சந்தையில் மதுரை தேனி திண்டுக்கல் விருதுநகர் சிவகங்கை இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து செம்மறியாடு வெள்ளாடு உள்ளிட்டவை பத்து கிலோ முதல் 30 கிலோ வரையிலான எடை உள்ள ஆடுகள் சுமார் 500க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் டாட்டா ஏசி வேன் போன்ற வாகனங்களில் விற்பனைக்காக ஆடுகளை கொண்டு வந்திருந்தனர் இதில் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்து ஆடு வளர்ப்பவரிடம் பேரம் பேசி ஆடுகளை வாங்கிச் சென்றனர் ஒரு ஆடு ரூபாய் பத்தாயிரம் முதல் 30,000 வரை விலை சென்றது குறிப்பிடத்தக்கதுUpdated: 19 Apr 2023, 3:31 pm