ஐந்தாவது முறையாக சாம்பியன் வென்ற சிஎஸ்கே - உசிலம்பட்டியில் கொண்டாட்டம்
1027 views
Subscribe மதுரை videosஐபிஎல் போட்டியின் இறுதி போட்டி சென்னை சூப்பர் சிங்ஸ் அணிக்கும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் நேற்று இரவு 7:30 மணிக்கு துவங்கியது.,முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 214 ரன் எடுத்திருந்தது., 215 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட துவங்கிய சிஎஸ்கே அணிக்கு முதல் ஓவரிலேயே கனமழை காரணமாக ஆட்டம் தடைபட்டது.,நீண்ட இடைவெளிக்கு பின் இரவு 12:10 மணிக்கு 15 ஓவருக்கு 171 ரன் எடுக்க வேண்டிய இலக்குடன் மீண்டும் களம் இறங்கியது சிஎஸ்கே அணி.,தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை துவங்கிய நிலையில் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்களால் சற்று சறுக்களை சந்தித்தது, அணியின் கேப்டன் தோணி முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தது அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றது., தொடர்ந்து இறுதியாக 2 பந்துக்கு 10 ரன் என கடுமையாக மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இந்த போட்டியில் ஜடேஜா இறுதியாக ஒரு சிக்ஸர், ஒரு ஃபோர் அடித்து சிஎஸ்கே அணியின் வெற்றியை பெற்று தந்தார்.,இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வென்று ஐந்தாவது முறையாக சாம்பியன்ஷிப் வென்றுள்ளது.,மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்புடன் நடைபெற்ற இப்போட்டியைமதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புரோஜெட்டர் மூலம் திரையில் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்ட சூழலில் இறுதி ஓவர் வரை மிகுந்த எதிர்பார்ப்போடு போட்டியை கண்டு கொண்டிருந்த ரசிகர்கள் சிஎஸ்கே அணி வீரர் ஜடேஜா இறுதி பந்தில் ஃபோர் ரன் எடுத்து வெற்றியை பெற்று தந்ததும் உலக ரசிகர்களை போன்று உசிலம்பட்டி பகுதி ரசிகர்களும் ஆரவாரத்தில் துள்ளி குதித்து தங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தி கொண்டாடினர்.,