பஸ்க்கு கிஸ் கொடுத்த டிரைவர்; கண்ணீர் ததும்ப பேச்சு!மதுரையில் ஓய்வு பெறும் நாளில் அரசு பேருந்தை முத்தமிட்டு , கட்டி அனைத்து அழுத ஓட்டுனரின் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.அரசின் பல்வேறு துறையில் பணியாற்றிய ஊழியர்கள் 60 வயது எட்டிய காரணத்தினால் இன்று அதிகமானோர் பணி ஓய்வு பெற்றனர்.இந்தநிலையில் மதுரை திருப்பரங்குன்றம் பணிமனையில் 30 ஆண்டுகளாக பணியாற்றிய ஓட்டுநர் பைக்காராவை சேர்ந்த முத்துப்பாண்டி பணி ஓய்வு பெறுவதன் காரணமாக தான் இத்தனை ஆண்டுகளாக ஓட்டி வந்த அரசு பேருந்தை போய்விடும் நாளில் இயக்கி கடைசியாக அதனை வணங்கி முத்தமிட்டு அரசு பேருந்தை கட்டித் தழுவி கண்ணீர் ததும்ப அரசு பேருந்து மூலம் தன் வாழ்வில் பெற்ற பயன்களை எடுத்துக் கூறி மகிழ்ச்சியுடன் பணி ஓய்வு பெறுவதாக ஓய்வு பெறும் ஓட்டுநர் பேசிய காட்சிகள் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இன்று பணி ஓய்வு பெற்ற முத்துப்பாண்டி மதுரை திருப்பரங்குன்றம் அரசு போக்குவரத்து பணிமனையில் அனுப்பானடி திருப்பரங்குன்றம் வழியாக அனுப்பானடி மற்றும் மகாலட்சுமி காலனி செல்லும் பேருந்து வழித்தட எண் 31 A பேருந்தை இயக்கியது இன்று கடைசி நாள் என்பதால் தான் ஓட்டிய அரசு பேருந்தை கட்டித்தழுவி முத்தமிட்டு பிரியாவிடை பெற்ற காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக வருகின்றது.இந்த காட்சிகளை கண்டவர்கள் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் முத்துப்பாண்டி இந்த தொழிலை எந்த அளவிற்கு நேசித்து பணியாற்றினார் , தான் செய்யும் தொழிலே தெய்வம் என்பதற்கு இந்த காட்சியே சிறந்த எடுத்துக்காட்டு எனவும் பதிவிட்டு வருகின்றனர்.