தமிழகத்தின் நீளமான மதுரை - நத்தம் பறக்கும் பாலத்தின் கேரிடார்கள் இடைவெளி? மழைநீர் அருவிபோல கொட்டிய காட்சி
1033 views
Subscribe மதுரை videosதேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மதுரை தல்லாகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை சுமார் 7.5 கி.மீ.க்கு ரூ.612 கோடியில் பறக்கும் பாலம் கட்டப்பட்டு கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கப்பட்டது.இந்த பறக்கும் பாலத்தில் அடியில் 150 அடி தூர இடைவெளியில் பலமான அஸ்திவாரத்துடன் 268 தூண்கள் கட்டப்பட்டுள்ளன. தூண்கள் இடைய பாலத்தை இணைக்கும் வகையில் கிடைமட்ட வாக்கில் ‘கான்கிரீட் கர்டர்கள்’ பொருத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக தொடர்ச்சியாக மழை பெய்தாலும் பாலத்தின் கீழ் வாகன ஓட்டிகள் நனையாமல் பயணிக்கும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே மழை நீர் சேகரிப்பு பைப்லைன்களும் அமைக்கப்பட்டு கீழேயுள்ள மழைநீர் வடிகால் மூலமாக மழைநீர் செல்கின்றது.இந்நிலையில் மதுரை மாநகரில் நேற்றிரவு கனமழை பெய்த நிலையில் இந்த பறக்கும் பாலத்தின் 114ஆவது கேரிடர் அமைந்துள்ள பகுதியில் திடிரென மழைநீர் அருவிபோல கொட்ட தொடங்கியது. இதனால் பாலத்தின்கீழ் செல்ல கூடிய வாகன ஓட்டிகள் கடந்துசெல்ல முடியாத நிலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை கடந்தும் சென்ற வாகன ஓட்டிகள் முழுவதுமாக நனைந்தபடி சென்ற அவலம் ஏற்பட்டது.தேசிய நெடுஞ்சாலைத்துறை உடனடியாக கேரிடரில் இடைவெளி உள்ளதா சிமெண்ட் எதுவும் பெயர்ந்து உள்ளதா என்பதை ஆராய்ந்து உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.612கோடியில் பறக்கும் பாலம் கட்டினாலும் சிறிய சிறிய குறைபாடுகள் ஆங்காங்கே இருப்பதால் பாலத்தின் பயன் முழுமையாக வாகன ஓட்டிகளுக்கு கிடைப்பதில்லை என புலம்பியபடி வாகன ஓட்டிகள் செல்கின்றனர்.