மீனாட்சி அம்மன் கோவில் திருவிழா குறித்து ஆலோசனை கூட்டம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் -கள்ளழகர் சித்திரை திருவிழாவிற்கு அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம்மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வைத்து ஆட்சித் தலைவர் அனீஸ்சேகர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநகர மேயர் இந்திராணி, மாநகர காவல் ஆணையர் நரேந்திர நாயர், உயரதிகாரிகள் கலந்து கொண்டு சித்திரை திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசும் போது :-சித்திரை திருவிழாவில் கடந்த ஆண்டு போல இந்தாண்டு எந்தவொரு நிகழ்வும் நடக்க கூடாதுகடந்த ஆண்டு நான் நேரில் வந்து ஆய்வு செய்தும் தவறுகள் நடந்துள்ளனகடந்த ஆண்டு மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தில் பாஸ் வழங்குவதில் குளறுபடிகள் நடந்துள்ளதுஎந்தவொரு அதிகாரியும் பாஸ் இல்லாமல் கோவிலுக்கு உள்ளே விடக்கூடாது.கடந்த வருடம் விழா கொரோனாவுக்கு பின்னர் 2 வருடத்திற்கு பின்னர் நடந்த விழா கூட்டம் அதிகம் என்பதால் சில விரும்ப தகாத சம்பவம் நடந்து விட்டது என்றார்.போக்குவரத்து நெரிசல் குறித்தும் ஆலோசனை செய்தனர்.பார்க்கிங் வசதி எங்கெல்லாம் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை முன்கூட்டியே மக்களுக்கு தெரிய படுத்த வேண்டும் என்றார்.போலீஸ் கமிஷனர் நரேந்திர நாயர் பேசும்போது:-கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்கு ஈடுப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.அதோடு அழகர் வரும் சாலையான புதூர் மூன்றுமாவடி உள்ளிட்ட பகுதிகளில் 130 CCTV கேமரா புதிதாக பொருத்தப்பட்டுள்ளது என்றும் போலீஸ் உடை, சாதாரண உடையில் குற்ற சம்பவம் நடைபெறாமல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர் என்றார்அதே போன்று இந்து அறநிலையத்துறை சார்பில் அழகர் ஒவ்வொரு மண்டகப்படிக்கு செல்லும் என்பது போன்ற நேரம் Timeshort குறித்து கொடுத்தால் காவல்துறையினருக்கு உதவியாக இருக்கும்நீதிபதிகள் மற்றும் விஐபி உள்ளிட்டோர் தனி கார் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் பேசும் போது:-சித்திரை திருவிழாவிற்கு மாநகராட்சி சார்பில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி,டெம்பரவரி கழிப்பிட வசதி, 27 மெடிக்கல் மொபைல் டீம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அழகர் ஆற்றில் இறங்கும் போது மக்கள் ஆற்றினுள் இறங்க வசதி செய்யப்பட்டு சீர்படுத்தி வருகிறோம் என்றார்.சித்திரை திருவிழாவை முன்னிட்டு30-ம் தேதி வைகையாற்றில் தண்ணீர் திறக்கப்பட இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தார்.maduraiTimesXP TamilUpdated: 24 Apr 2023, 6:36 pm