சரக்கு வாகனம் மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்தின் CCTV காட்சி
1041 views
Subscribe மதுரை videosமதுரை பேரையூர் பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி இவர் தனக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை கடந்த 10ஆம் தேதி மதியம் 1.30 மணி அளவில் விமான நிலையம் அருகே உள்ள மண்டேலாநகர் நான்கு வழிச்சாலையில் உள்ள டீக்கடை முன்பு டீ அருந்த நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார். அப்போது சென்னை ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அசிர்ஏசா என்பவர் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக தனது குடும்பத்தினருடன் வினோஜா., ஈஸ்வரி ஆகியோருடன் காரில் அதிவேகமாக வந்து கொண்டிருந்தார். அப்போது கார் மண்டேலாநகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தி இருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி அருகில் இருந்த டீக்கடை முன்பு பாய்ந்து விபத்துக்குள்ளானது.இதில் டீக்கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் அனைத்தும் சுக்கு நூறானது., இதில் படுகாயம் அடைந்த அசிர்ஏசா மற்றும் அவரது குடும்பத்தினர் வினோஜா., ஈஸ்வரி ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தற்போது இந்த விபத்தினுடைய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து விபத்து குறித்து பெருங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டுப்பாட்டை இழந்த அதிவேகமாக வந்த கார் சாலையோரம் நிறுத்தி இருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி அருகில் இருந்த டீக்கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வானங்கள் மீது மோதி நின்று சுக்கு நூராக்கிய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.