அவனியாபுரம் J.J.நகர் பொதுமக்கள் சாலை மறியல்.
மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அவனியாபுரம் J.J.நகர் பொதுமக்கள் சாலை மறியல்.மதுரை மாநகர் பகுதியான அவனியாபுரம் ஜே.ஜே.நகரில் 5-திற்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளது. சுமார் 2000 முதல் 5000 பேர் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அடிப்படை வசதிகளான சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, தெரு விளக்கு வசதிகள் ஏதும் இல்லாததால் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் 100வது வார்டு மாமன்ற உறுப்பினருக்கும் மனு கொடுத்தும் மாவட்ட ஆட்சியர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தங்களது பகுதிக்கு அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தராததால் மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்களிடம் நேரில் சென்று மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மாமன்ற உறுப்பினர் முத்துலட்சுமி அய்யனார் 2 வருட காலங்கள் ஆகியும் J.J.நகர் மக்களாகிய எங்களை வந்து சந்திக்கவில்லை எனவும் முறையான பாதாள சாக்கடை வசதிகள் எதுவும் இல்லாததால் குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் தொற்று அபாயம் உள்ளது. மேலும் M, சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் அடிக்கடி கிழே விழுந்து விடுகிறார்கள். இந்த சாலைகளினால் அவசர காலத்திற்கு ஆம்புலன்ஸ் கூட உள்ளே வரவில்லை. இங்கு குடியிருக்கும் பொதுமக்கள் அன்றாட தினக்கூலி வேலைக்கு செல்வதால் தற்போது வரை குடிநீரை விலை கொடுத்து வாங்கும் சூழல் உள்ளது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு மாமன்ற உறுப்பினர் முத்துலட்சுமி அய்யனார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும்., அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு அரசாணை வந்திருக்கிறது என வார்டு உறுப்பினர் கூறியும் தங்கள் வார்த்தை மீது நம்பிக்கை இல்லை என பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மதுரை விமான நிலைய சாலையில் மிகவும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.maduraiTimesXP TamilUpdated: 30 May 2023, 6:27 pm