திமுக கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு அண்டா பரிசு-முண்டியடித்துக் கொண்டு அண்டாவை தூக்கிச் சென்ற தொண்டர்கள்!
1067 views
Subscribe மதுரை videosமதுரை திருப்பரங்குன்றத்தில் திமுக பொதுக்கூட்டத்திற்கு வரவழைக்கப்பட்ட தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு டோக்கன் முறையில் அண்டா வழங்கியதால் அண்டாவை போட்டி போட்டு ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு அண்டாவை வாங்கி சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.தமிழக அரசின் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டுகள் சாதனை குறித்து தமிழகம் முழுவதும் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆங்காங்கே கட்சியின் நிர்வாகிகள் பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் மதுரை திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் இன்று இரவு நடைபெற்ற இரண்டு ஆண்டு கால ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் திருப்பரங்குன்றம் மண்டல தலைவர் சுவீதாவிமல்., திருப்பரங்குன்றம் வடக்கு பகுதி செயலாளர் கிருஷ்ணா பாண்டி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.பொதுக்கூட்டம் என்று தான் பொதுமக்களை வரவழைத்திருந்தனர். ஆனால்., கூட்டத்திற்கு அதிகமான பொதுமக்கள் வர விருப்பம் இல்லாமல் இருந்ததால் கூட்டத்திற்கு வரும் பொதுமக்களுக்கு அண்டா வழங்கப்படும் எனக்கூறி டோக்கன் கொடுத்து கூட்டத்திற்கு வரவழைத்தனர். கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் வெகு நேரமாக காத்திருந்த நிலையில் திடீரென சுற்றுவட்டார பகுதியில் மழை காரணமாக பொதுக்கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து., கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் வெறுங்கையோடு போகாகூடாது என்றும் மேடையை பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் டோக்கன் வைத்திருந்த அனைவருக்கும் ஒரு பகுதியில் வரவழைத்து அவர்களுக்கு அண்டா கொடுக்கப்பட்டு அனுப்பி வைத்தனர். அண்டா வாங்குவதற்கு பொதுமக்கள்., தொண்டர்கள் என போட்டா போட்டி போட்டு முண்டி அடித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. பொதுக்கூட்டம் என்று வரவழைத்து நலத்திட்டம் உதவி கொடுத்ததால் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் செய்வதறியாது அமைதியாக வேடிக்கை பார்த்தனர்.