மூகுர்த்த நாட்களில் 500, 1000 லஞ்சம் வாங்கி கல்லாகட்டும் அர்ச்சகர் மற்றும் கோவில் ஊழியர்கள்!
1036 views
Subscribe மதுரை videosஅறுபடை வீடுகளில் முதற்படை வீடான அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் முருகன் தெய்வானையை கரம்பிடித்த இடம் என்பதால் இங்கு மாதாமாதம் மூகுர்த்த நாட்களில் ஏராளமான புதுமண ஜோடிகள் திருமணம் செய்து கொள்வது வழக்கம். திருப்பரங்குன்றம் கோவிலில் திருமணம் செய்ய வேண்டுமென்றால் 4000 ரூபாய் பணம், திருமண வயத்திற்கான சான்றிதழ், ஆதார் அட்டையின் நகல் உள்ளிட்டவை கொடுத்து முன் பதிவு செய்திருக்க வேண்டும்.அதன் பிறகு மூகுர்த்த நாட்களில் பதிவு செய்த புதுமண ஜோடிகள் தங்களது குடும்பத்தினருடன் வருகை புரிந்து திருமணம் செய்து கொள்வார்கள். அப்படி திருமணம் செய்வதற்கு வருகை தரும் ஜோடிகள் அல்லது அவர்களின் உறவினர்களிடம் முன்பதிவின்போது கொடுத்த 4000 ரூபாய் பணம் போக திருமனத்தன்றும் 500., 1000 கூடுதலாக லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் சித்திரை மாதத்தில் எந்த மூகுர்த்தமும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது வைகாசி மாதம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக மதுரை திருப்பரங்குன்றத்தில் 200-க்கும் மேற்பட்ட திருமண நிகழ்ச்சிகள் திருப்பரங்குன்றம் கோவிலில் நடைபெற்றது.இந்த நிலையில் திருமணம் செய்ய வரும் ஜோடிகளிடம் திருமணம் முன்பதிவு கட்டணம் செலுத்தியது போக திருமணம் முடிந்த பின்னர் அர்ச்சகர்களின் செலவுக்கு என கூறி 500, 1000 ரூபாயும்., இது போக தங்களுக்கு உணவுக்கு காசு அளிக்க வேண்டும் என கோவில் நிர்வாக ஊழியர்கள் திருமணம் செய்ய வரும் ஜோடிகளிடைய லஞ்சம் பெறுகின்றனர் இந்த காட்சிகள் அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்துள்ளனர்.இது பற்றி பலமுறை அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார்கள் தெரிவித்தும் இது பற்றி கண்டு கொள்ளாததால் தற்போது கோவில் நிர்வாக ஊழியர்கள் அடுத்தடுத்து திருமணம் செய்ய வரும் ஜோடிகளிடம் பணம் கேட்டு வற்புறுத்தி கல்லா கட்டுகின்றனர். இது குறித்து அறநிலைத்துறை அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் கொண்டு திருமணம் செய்ய வரும் ஜோடிகளிடம் முன்பதிவு செய்தது போக லஞ்சம் வாங்கும் கோவில் ஊழியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்