மாடக்கோவில் சிற்ப அமைப்புடன் கூடிய சுமார் 400 ஆண்டுகள் பழமையான நடுகல்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஜே.மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள மாலைக்காடு என்ற இடத்தில் இந்த பகுதியில் இறக்கும் மக்களுக்கு நடுகல் அமைப்பதை காலம் காலமாக இன்றளவும் வழக்கமாக கொண்டுள்ளனர்.இந்த இடத்தில் தூய்மை செய்வதற்காக மணலை தோண்டிய போது 6 அடி உயரத்தில் கலை நயத்துடன் கூடிய சிற்பங்களுடன் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.,இந்த நடுகல் குறித்து அறிந்து கள ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தலைமையிலான குழுவினர்., இந்த நடுகல் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும்., நடுகல்லின் மூன்று பகுதிகளிலும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தலா ஒரு அடி வீதம் என 9 சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.,தலைவன் ஒருவருக்கு குடை பிடித்து செல்வது போன்றும், பசுமாட்டில் பால் குடிக்கும் கன்று, மான், இசை கருவிகள் வாசிக்கும் பெண்கள் என ஒன்பது சிற்பங்களும் கலை நயத்துடன் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.,இந்த பகுதியில் வளமையுடன் வாழ்ந்தவரின் நினைவாக இந்த நடுகல் எழுப்பி இருக்கலாம் என தொல்லியல் ஆய்வாளர் காந்திராஜன் தெரிவித்தார்.,maduraiTimesXP TamilUpdated: 15 May 2023, 5:29 pm