நாட்றம்பள்ளி அருகே விவசாய நிலத்தில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை கண்டு கூலி தொழிலாளர்கள் பதரி அடித்து ஓட்டம்!
1032 views
Subscribe தமிழ்நாடு videosதிருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பையனபள்ளி கூட்ரோடு அருகே அக்பர் இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மாங்காய் தோப்பில் கூலி தொழிலாளியை வைத்துக்கொண்டு மாங்காய் அறுவடை செய்யும் பொழுது மாந்தோப்பில் சுமார் எட்டு அடி நீளம் கொண்ட மலை பாம்பு ஒன்று ஊர்ந்து வருவதை கண்டு கூலி தொழிலாளர்கள் பதறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர் உடனடியாக நாட்றம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பெயரில் தீயணைப்புதுறை அதிகாரி ரமேஷ் தலைமையில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மலைப்பாம்பை லாபகரமாக பிடித்து வன துறையினரிடம் ஒப்படைத்தனர் வனத்துறையினர் நாட்றம்பள்ளி அருகே உள்ள காப்பு காட்டில் விட்டு சென்றனர் இதனால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது