குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி திரியும் 2 காட்டு யானைகளை பிடிக்க மூன்று கும்கி யானைகள் வரவைப்பு!
1051 views
Subscribe தமிழ்நாடு videosதிருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி திரியும் 2 காட்டு யானைகளை பிடிக்க மூன்று கும்கி யானைகள் வரவைப்பு.திருப்பத்தூர் மாவட்டம் தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியான நாட்றம்பள்ளி அடுத்த தகரகுப்பம் மலைப்பகுதியில் கடந்த சனிக்கிழமை முகமிட்டிருந்த இரண்டு காட்டு யானைகளை காட்டுக்குள் விரட்டி அடிக்கும் முயற்சிகளில் வனத்துறையினர், மற்றும் காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி தகரகுப்பம் பகுதியில் இருந்து.ஆத்தூர்குப்பம் தேசிய நெடுஞ்சாலையை கடந்து அருகே உள்ள கரும்பு தோட்டத்தில் முகாமிட்டன.இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் யானையை விரட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து கடந்த 16-ஆம் தேதி ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் இரண்டு யானைகளும் தஞ்சம் அடைந்தது... இதனையடுத்து ஏலகிரி மலைகளில் இருந்து நேற்று வெளியேறிய அந்த இரண்டு காட்டு யானைகள் திருப்பத்தூர் பாச்சல் அடுத்த அண்ணாண்டப்பட்டி ஏரியில் முகாமிட்டு இருந்தது.இதனை டோன் கேமரா மூலம் கண்காணித்து வரும் வனத்துறையினர் அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்டியடிக்க கடந்த நான்கு நாட்களாக போராடி வந்தனர்.பின்னர் நேற்று இரவோடு இரவாக அங்கிருந்து வெங்களாபுரம் வழியாக திப்பசமுத்திரம் பகுதியில் இரண்டு யானைகளும் முகாமிட்டு வருகின்றது.இந்த யானைகளை பிடிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பொள்ளாச்சி ஆணமலையிலிருந்து சின்தம்பி மற்றும் முதுமலையிலிருந்து உதயன்,வில்சன் ஆகிய மூன்று கும்கி யானைகளை வரவைக்கப்பட்டுள்ளது.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ஏற்கனவே இந்த காட்டு யானைகள் தர்மபுரி மாவட்டத்தில் மூன்று பேரும் கிருஷ்ணகிரியில் ஒருவரும் ஆந்திர மாநிலத்தில் இருவரும் என மொத்தம் இதுவரை 6 பேரைக் கொன்று திருப்பத்தூர் மாவட்ட இரண்டு இளைஞர்களை தூக்கி வீசியதில் பலத்த படுகாயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.