தேன்கனிக்கோட்டையில் வீட்டில் இருந்த 22 நாகபாம்பு குட்டிகளை வனத்துறையினர் மீட்டனர்!
1249 views
Subscribe கிருஷ்ணகிரி videosகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்த கோபி என்பவரதுவீட்டில் 6அடி நீளம் நாகபாம்பு உள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் வனத்துறையினர் பாம்புபிடிப்பவர்களை அழைத்து சென்று பாம்பை பிடிக்க முயன்றனர் அப்போது நாகபாம்பின் அருகே 22 நாகபாம்பு குட்டி இருப்பதை கண்டுஅதிர்ச்சியடைந்தனர்.இதன் பின்னர் 6 அடி நீளம் நாக பாம்பை பிடித்த வனப்பகுதியில் விட்டனர் அதே போல் 22 குட்டிகளையும் ஒரு பக்கொட்டில் போட்டு கொண்டு சென்றனர் அப்போது குட்டிநாகம் ஒன்று பாம்பு பிடித்தவரை கடித்தது இதில் அவர் சம்பவ இடத்திலியே மயங்கி விழுந்தார். அவரை வனத்துறையினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அவரை மருத்துவர்கள் திவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சையளித்து வருகின்றனர். கடித்த குட்டி நாகத்துடன் 22 குட்டிகளை அடந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர். வீட்டில் 6அடிநீளம் நாக பாம்புடன் 22 குட்டிநாகபாம்பு இருந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது