கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத பிரதோஷ விழா
1025 views
Subscribe கரூர் videosதென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் மாநகர் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.அதை தொடர்ந்து கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமிக்கு அபிஷேகங்கள் நடைபெற்று நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு ஆலயத்தில் சிவாச்சாரியார் தூப தீபங்கள் காட்டி, அதைத் தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு மகா தீபாராதனை காட்டினார். ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி மாத பிரதோஷ விழாவை காண ஏராளமான பக்தர்கள் ஆலய வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.