கரூரில் இன்று 8வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை!
1024 views
Subscribe கரூர் videosகரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு மற்றும் அலுவலங்களில் கடந்த மே மாதம் 26ம் தேதி முதல் இன்று எட்டாவது நாளாக பல்வேறு இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.கரூர் மாநகராட்சிக்குட்ப்பட்ட காமராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான BSK பில்டர்ஸ் என்ற இன்ஜினியர் அலுவலகத்தில் வருமானவரித்துறையினர் இன்று புதிதாக சோதனை தொடங்கினர்.இரண்டு வாகனங்களில் வந்த 6 வருமான வரித்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டனர்.பின்னர், அந்த அலுவலகத்தில் இருந்தகம்ப்யூட்டர், சிபியூ மற்றும் பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.அதேபோல் இன்று காலை கரூர் லாரிமேடு பகுதியில் உள்ள வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த சோதனையில் இன்று இரண்டு அட்டை பெட்டியில் ஆவணங்கள் எடுத்து சென்றனர். செங்கோட்டையன் வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து இரண்டு பெட்டியில் ஆவணங்களை எடுத்து சென்றதும், பிஎஸ்கே பில்டர்ஸ் இன்ஜினியர் அலுவலகத்தில் இருந்து கம்ப்யூட்டர் சிபியூ உள்ளிட்ட ஆவணங்கள் என இரண்டு இடங்களில் வருமான வரித்துறையினர் ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுயியயுள்ளது.