சிவபாரதி எனும் தலைப்பிட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்ட்ரால் பரபரப்பு!
1043 views
Subscribe கரூர் videosகரூர் மாநகரில் ஜவஹர் பஜாரில் வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தற்போது வட்டாட்சியராக சிவக்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கரூர் மாநகரில் வட்டாட்சியர் அலுவலகம், பேருந்து நிலையம், வடக்கு பிரதட்சணம் சாலை, ஜவஹர் பஜார், ஆசாத் சாலை, லைட்ஹவுஸ் கார்னர் உள்ளிட்ட நகரின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த சுவரொட்டியில், காவல் துறையே, வருவாய் துறையே, மாவட்ட நிர்வாகமே நடவடிக்கை எடு, சிவ பாரதி என்பவர் யார் எனும் தலைப்பிடப்பட்டுள்ளது. அதில் கரூர் தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தாரா, கிராம நிர்வாக அலுவலரா அல்லது வருவாய் வரி ஆய்வாளரா என்ற கேள்வியுடன் துணை தலைப்பிடப்பட்டுள்ளது. தாலுக்கா அலுவலகத்திற்கு வரும் பொது மக்களிடம் ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி, எனக்கு அதிகாரிகளை தெரியும் என மனுக்களை பெற்றும், பட்டா பெயர் மாற்றம் செய்து தருவதாகவும், இடத்தை அளந்து தருவதாகவும் சொல்லி பணம் வசூல் செய்து உல்லாச வாழ்க்கை வாழ்வதாகவும், சிவபாரதி கொடுக்கும் மனு மீது நடவடிக்கைகள் எடுக்காத அதிகாரிகள் மீது பெட்டிசன் போடுவது, லஞ்ச ஒழிப்பு துறைக்கு பொய்யான தகவல் கொடுக்கும் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும், அவர் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.