அருள்மிகு கரூர் மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு புஷ்ப வாகனத்தில் சுவாமி திருவீதி உலா!
தென் தமிழகத்தில் அம்மன் ஆலயங்களில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ கரூர் மாரியம்மன் ஆலயத்தில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார்.இந்நிலையில் இன்று அருள்மிகு கரூர் மாரியம்மன் மற்றும் மாவடி ராமசுவாமி புஷ்ப வாகனத்தில் திருவீதி உலா காட்சி அளித்தனர். ஆலயத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது.ஆலயம் குடிபுகுந்த மாரியம்மன் மற்றும் மாவடி ராமசுவாமிகளுக்கு ஆலயத்தின் பூசாரி மகா தீபாராதனை காட்டினார். அதைத்தொடர்ந்து வைகாசி மாத புஷ்ப வாகன திருவீதி விழா சிறப்பாக நிறைவு பெற்றது.தேர்வீதி அருள்மிகு கரூர் மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்று வரும் வைகாசி மாத திரு வீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழி எங்கிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை மாரியம்மன் ஆலய பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார்.karurTimesXP TamilUpdated: 8 Jun 2023, 10:42 am