ஆறாவது நாளாக செந்தில் பாலாஜி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் சோதனை
Subscribe கரூர் videos
கரூரில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது சகோதரர் அசோக் குமார், ஆகியோரின் உறவினர்கள், நண்பர்கள்,ஆதரவாளர்கள் என பல்வேறு இடங்களில் 26 ஆம் தேதி சோதனை தொடங்கியது.சோதனையானது கரூர் மாவட்டத்தில் 20-க்கு மேற்பட்ட இடங்களில் வருமானவரி துறை சோதனை விரிவுப்படுத்தி சோதனை நடைபெற்று வந்தது.இந்நிலையில் ஆறாவது நாளான அன்று வருமான வரி துறை அலுவலர்கள் சோதனையை துவக்கினர்.சோதனையானது மின்துறை அமைச்சரின் நெருங்கிய நண்பர் அரசு ஒப்பந்ததாருமான எம்.சி.சங்கர்ஆனந்தின், சங்கர் ஆனந்த் இன்பிரா அலுவலகத்தில் மேலாளராக பணிபுரியும் காந்திகிராமம் இபி காலனியில் உள்ள சோபனா- பிரேம்குமார் வீட்டில் தொடர்ந்து,கரூர் வையாபுரி நகர் நாலாவது தெருவில் உள்ள ஒரு ஆடிட்டரின் அலுவலகம் சின்னஆண்டான் கோயில் பகுதியில் தங்கராஜ் என்பவர் வீட்டில் சோதனையை துவக்கி உள்ளனர்.மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் சோதனை நடத்துகின்றனர்.