கரூரில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம்
1010 views
Subscribe கரூர் videosமாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று தினம்தோறும் மற்றும் குப்பைகள், மக்காத குப்பைகளை சேகரிக்கும் தூய்மை பணியாளர்கள் வராததால் வீடுகளில் தேங்கிய குப்பைகளை பொதுமக்கள் திறந்த வெளிகளில் கொட்டி சென்றுள்ளனர். இதன் காரணமாக கரூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் திறந்தவெளியில் சாலை ஓரங்களில் காய்கறி கழிவுகள், மருத்துவ கழிவுகள், நெகிழி குப்பைகள் என குப்பைகள் மழை போல் தேங்கியுள்ளன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மாநகராட்சி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அங்கிருந்து புறப்பட்டு கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.