கரூர் உழவர் சந்தையில் நேற்று 80 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி திடீரென 98 ரூபாய்க்கு விற்பனையானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தக்காளியின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கடந்த முறை விலை ஏற்றம் கண்டபோது கூட்டுறவு அங்காடிகளில் குறைவான விலைக்கு தக்காளியை விற்பனை செய்தது போல, இந்த முறையும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.