ரம்ஜான் வியாபாரம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.கரூர் அருகே மணல்மேடு ஆட்டுச் சந்தையில் 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை - ரம்ஜான் வியாபாரம் எதிர்பார்த்த அளவு இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.கரூர் மாவட்டம், மணல்மேடு பகுதியில் கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகில் வாரம் தோறும் ஆட்டு சந்தை நடைபெற்று வருவது வழக்கம். தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்றுவரும் இந்த ஆட்டு சந்தையில் நாமக்கல், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, பழனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு கடந்த வாரம் 75 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையான நிலையில், இந்த வாரம் ஆட்டு சந்தையில் 50 லட்சத்திற்கு மட்டுமே விற்பனை ஆனதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த வாரம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையானது. ஆனால், இந்த வாரம் சுமார் 10,000 ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளன. கோடைகாலத்தில் ஆடுகளுக்கு கழிச்சல் நோய் ஏற்படுவதால் ஆடுகள் வரத்து குறைந்திருக்கலாம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.