பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை
தமிழகத்தில் வெப்பமண்டலம் பகுதியாக கரூர் மாவட்டம்-வெப்பத்தில் காப்பாற்ற அங்கன்வாடி பள்ளி குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை.தமிழகத்தில் அதிக வெப்பம் வாட்டி வதைக்கும் பகுதியாக கரூர் மாவட்டத்தில் 106.7 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.கத்திரி வெயில் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வெளுத்து வாங்கிக் கொண்டுள்ளது.இதனால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றனர் மேலும் நெடுஞ்சாலையில் கானல் நீரால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இந்த நிலையில் ஒரு சில பள்ளி மாணவ, மாணவிகள் வெயிலின் தாக்கத்தால் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.குறிப்பாக அங்கன்வாடி பள்ளிகளில் சிறு குழந்தைகள் பயின்று வரும் நிலையில் தமிழகத்திலேயே கரூர் மாவட்டத்தில் அதிக அளவில் வெப்பம் பதிவாகியுள்ளதால் குழந்தைகளின் நலன் கருதி இந்த அரசு அங்கன்வாடி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் வெயிலின் தாக்கத்தால் பள்ளி குழந்தைகளுக்கு தோல் நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.எனவே அனல் காற்று வீசுகிறது மதிய நேரங்களில் பெரியவர்களே வெளியே நடமாற்றம் இல்லாமல் இருந்து வருகின்றனர்,இந்த நிலையில் குழந்தைகள் அங்கன்வாடி பள்ளிக்கு செல்வதற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் என பெற்றோர்கள் கூறி வருகின்றனர்,எனவே அரசு கவனம் செலுத்தி இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக அங்கன்வாடி மையத்திற்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர வருடத்தில் எந்த நாளும் விடுமுறை இல்லாமல் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதனால் குழந்தைகளை வெயிலில் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.karurTimesXP TamilUpdated: 19 Apr 2023, 6:50 pm