கரூர் பெண் குழந்தையின் அபார சாதனை!
கரூர் பெண் குழந்தையின் அபார சாதனை!
குளித்தலையில் 40 திருக்குறள்கள் தமிழ் ஆங்கில மாதங்கள் தேசிய கீதத்தினை பாடிய இரண்டு வயது ஒன்பது மாதங்களான பெண் குழந்தை இந்தியன் புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை பெரியார் நகரில் வசித்து வருபவர்கள் கமலக்கண்ணன் சங்கீதா தம்பதியினர் இவர்களது மகள் ஆராதனா. இவருக்கு இரண்டு வயது நிறைவு பெற்று 9 மாதங்கள் ஆகிறது. இரண்டு வயது ஒன்பது மாதங்களிலேயே 40 திருக்குறள்கள், தமிழ் ஆங்கில மாதங்கள், கடவுள் சுலோகம், ஆத்திச்சூடி, ஆங்கில எழுத்துக்கள், தேசிய கீதம் ஆகியவற்றினை பிழை இல்லாமல் கூறியது. இரண்டு வயது ஒன்பது மாதங்களான பெண் குழந்தை பிழையில்லாமல் சரியாகக் கூறியதை இந்தியன் புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது. மூன்று வயது நிறைவு பெறுவதற்கு முன்பே இவை அனைத்தையும் பிழையில்லாமல் சரியாக கூறி இந்தியன் புக்ஸ் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம் பெற்ற இந்த பெண் குழந்தையினை குளித்தலை பகுதி பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.Updated: 17 May 2023, 6:38 pm