கரூர் மாவட்டத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் சோதனை!
1009 views
Subscribe கரூர் videosகரூர் மாவட்டத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் காலை முதல் சோதனை மேற்கொண்டு வந்த போது திமுக நிர்வாகிகள் பல்வேறு பகுதிகளில் விரட்டி அடித்துள்ளனர் இந்த நிலையில் இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்த வருமானவரித்துறை அதிகாரிகள் எஸ்பி சுந்தரவதனம் இடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு.ஒவ்வொரு வாகனத்திலும் இரண்டு போலீசார் உதவியுடன் மீண்டும் வருமான வரி துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் சோதனைக்காக சென்றனர்.குறிப்பாக இதுவரை 20 வாகனங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளது இதில் மூன்று வாகனங்கள் மட்டும் போலீசார் பாதுகாப்புடன் வெளியே சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.செய்தியாளர்களுக்கு எஸ்பி அலுவலகத்திற்குள் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.