கள்ள சாராயம் காய்ச்சுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்
1042 views
Subscribe கரூர் videosகரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை, கள் இறக்கி விற்பனை செய்வது, சட்ட விரோதமாக வெளி மாநில மதுபாட்டுகளை வாங்கி விற்பனை செய்பவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், கலப்பட மதுபானங்களை தயார் செய்பவர்கள் பற்றிய தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவிக்கும் வகையில் 94981 00780 மற்றும் 04324-296299 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல்களை பொதுமக்கள் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் எச்சரித்துள்ளார்.