"பொதுச்செயலாளர் எடப்பாடியார்" கரூரில் கொண்டாட்டம்!
1007 views
சப்ஸ்கிரைப் karur வீடியோஸ்கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் அதிமுகவினர் ஊர்வலமாக வந்து, பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டம்.அதிமுக பொதுக்குழு தேர்தல் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. மேலும், பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை இல்லை என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து கரூர் மாவட்ட அதிமுக சார்பில் மாநகராட்சி பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் ஏராளமான அதிமுகவினர் அதிமுக கட்சி கொடிகளை கையில் ஏந்தியவாறு பொதுச் செயலாளர் எடப்பாடியார் என்று கோஷமிட்டபடி ஊர்வலமாக வந்து, பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.