கரூர் அரசுமருத்துவ மனையில் உள்ள கழிவறை சுகாதாரமற்ற முறையில் இருப்பதால் நோயாளிகள் அவதி!
1014 views
Subscribe கரூர் videosகரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்திகிராமம் பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு கரூர் மாவட்டம் மக்கள் அல்லாமல், திருச்சி, நாமக்கல், திண்டுக்கல் மாவட்ட மக்கள் இந்த மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது முறையான பராமரிப்பு இல்லாததால் மருத்துவமனை கழிவறைகள் துர்நாற்றத்துடன் இருப்பதாகவும், தண்ணீர் இல்லாததாலும், தண்ணீர் பைப்கள் உடைந்தும் இருப்பதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக 6வது தளத்தில் ஆண்கள் பிரிவு உள்நோயாளிகள் பிரிவில் உள்ள கழிப்பறை மிக மோசமான நிலையில் இருப்பதால் அவற்றை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சீர் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.